Monday, March 1, 2010

உங்கள் உணர்வுகளினை நிறங்களால் நிரப்புங்கள்..



நீல வெளிச்சமானது நீண்ட காலமாக எதிர்மறையான விடயத்துடன் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் பிரகாரம், நீல நிறமானது தன்னம்பிக்கையினையும், சந்தோச மட்டத்தினையும் உயர்த்திவிடுவதற்கு துணைபுரிகின்றது எனத் கண்டறிந்துள்ளனர். சசெக்ஸ் பல்கலைக்கழத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிறங்களினையும், ஒளியினையும் வெளிக்காட்டி ஆய்வுகளினை சிலரிடம் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் பிரகாரம், நீல நிறமும், பச்சை நிறமும் ஆண்களிடம் சந்தோச உணர்வினை ஏற்படுத்துகின்றதாம், அதேவேளை நீலம், ஊதா, மற்றும் செம்மஞ்சள்[ஒரேஞ்ச்] ஆகிய நிறங்கள் பெண்களிடம் சந்தோச உணர்வினை ஏற்படுத்துகின்றதாம். மேலும் நீல நிறமும், சிவப்பு நிறமும் ஆண்களிடையே தன்னம்பிகை மட்டத்தினை மேம்படுத்துகின்றதாம், அதேவேளை நீல நிறமும், ஊதா நிறமும் பெண்களிடையே சிறந்த மதிப்பினை ஏற்படுத்துகின்றதாம்.

இந்த ஆய்வின் பிரகாரம், பிரகாசமான நிறங்கள் பொதுவாக நன்மையான விடயங்களினை வெளிக்காட்டுகின்றதாம்.


###########################################################


நிறங்கள் என்றவுடன் ஓவியங்கள் நம்முடைய நினைவுக்கு வரும். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோவின் கைவண்ணத்தில் உருவாகிய ஓவியங்களில் ஒன்று உங்களுக்காக பார்த்து ரசியுங்கள்...........

***

2 comments:

Unknown said...

பிக்காசோ ஓவியமும் சரி உங்க பதிவும் சரி

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே நன்றிகள்.

Blog Widget by LinkWithin