Sunday, January 31, 2010

இமயமலை எவ்வாறு தோன்றியது?.......



140கோடி வருடங்களுக்கு முன்பாக தற்காலத்து இந்தியா கோண்டுவானா என்கின்ற ஒரு பெரிய கண்டத்தின் பாகமாக இருந்தது. பூமிக்கு உள்ளே இருக்கும் வெப்பத்தினால் கோண்டுவானா என்ற கண்டம் துண்டுதுண்டாக உடைந்து போனது. அந்தக் கண்டம் உடைந்து இன்றைக்கு இருக்கும் ஆபிரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, அந்தார்ட்டிக்கா, மற்றும் தென் அமெரிக்காவானது. மற்ற எல்லா தேசங்களையும்விட இந்திய தட்டு ஒருவருடத்திற்கு 18 முதல் 20 சென்ரிமீற்றர் வேகத்தில் பிரயாணம் செய்தது. அவுஸ்ரேலியாவும், ஆபிரிக்காவும் வருடத்திற்கு 4 சென்ரிமீற்றர் என்ற வேகத்தில் பிரயாணம் செய்தன. அந்தார்ட்டிக்கா அசையவேயில்லை. 50கோடி வருடங்களுக்கு முன் இந்தியா அதிவேகமாக வந்து யூரேசியாவுடன் மோதியது. இம் மாபெரும் மோதலால் பூமி உடைந்தது. மறுபடியும் உயரும்படி செய்தது. இவ்வாறுதான் உலகத்தின் மிகப்பெரிய மலைத்தொடர்ச்சி உருவானதாம்.


***

1 comment:

சாமக்கோடங்கி said...

நல்ல செய்தி...

தொடருங்கள்..

நன்றி..

Blog Widget by LinkWithin