Monday, January 25, 2010

சதாம் ஹுசைன், ஹிட்லர் இடையேயான ஒரு ஒற்றுமை

• இங்கிலாந்தினை ஆட்சி செய்த 1ம் ஜோர்ஜ் மன்னர், இவர் ஆங்கிலம் பேசமாட்டாராம். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஜேர்மனி நாட்டில் தானாம். 1714ம் ஆண்டு முதல் 1727ம் ஆண்டு வரை இங்கிலாந்தினை ஆட்சி செய்த இவர் ஆங்கிலத்தினை பேசுவதற்கு கற்கவில்லையாம். அப்படியாயின் இவர் எவ்வாறு நாட்டினை ஆட்சி செய்தார்? ஆம். இவர் முதலாவது அரசாங்க அமைச்சரவையினை நிறுவி தனது அமைச்சர்களினூடாகவே இங்கிலாந்தினை ஆட்சி செய்தாராம்.

• ஈராக் நாட்டினை ஆட்சி செய்த சதாம் ஹுசைன், பொதுமக்களினை கொன்ற குற்றச்சாட்டில் அமெரிக்க அரசாங்கத்தின் தயவில் இயங்கிய ஈராக் அரசாங்கத்தினால் தூக்கு தண்டனைக்குள்ளாகி மரணமானர். சதாம் என்ற பெயரின் அரபு விளக்கம் “எப்போதும் யுத்தத்துக்கு தயாரானவராம்”.

• ஜேர்மனி நாட்டினை ஆட்சி செய்த சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் எழுதிய நூலின் பெயர் “எனது போராட்டம்”. அதேவேளை சதாம் ஹுசைன் எழுதிய நூலின் பெயர் “எங்களுடைய போராட்டம்”.



• எட்வேட் கென்னடி, ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற போது ஸ்பானிஷ் பரீட்சையில் மோசடி செய்தமைக்காக இடைநிறுத்தம் செய்யப்பட்டாராம்.

• தொலைபேசியினை உலகுக்கு அறிமுகம் செய்தவர் அலெக்சாண்டர் கிரஹம்பெல் என்பதனை நாமறிவோம். இவரின் இறுதிச் சடங்கின் போது அமெரிக்காவிலும், கனடாவிலும் 1 நிமிடத்துக்கு தொலைபேசிகளின் பாவனை அனைத்தும் நிறுத்தப்பட்டது.



• அமெரிக்க ஜனாதிபதியாக தற்சமயம் பதவிவகிக்கும் பராக் ஒபாமா, 2006ம் ஆண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்ட சிறந்த பேச்சுக்காக கிராமி விருதினைப் பெற்றுக்கொண்டார். “என் தந்தையின் கனவுகளிலிருந்து” என்ற தனது புத்தகத்தின் ஒலிப்பதிவு வடிவமே இதுவாகும்.

***

No comments:

Blog Widget by LinkWithin