Tuesday, December 22, 2009

சபாநாயகருக்கு பேசுவதற்கு அனுமதியில்லையா ?

  • உலகிலுள்ள சிறகில்லாத ஒரே ஒரு பறவை நியூசிலாந்தின் கிவி பறவை.
  • பெண் சிங்கங்களே அதிகளவான வேட்டையாடல்களினைச் செய்கின்றதாம்.(90%)
  • யானைகளினால் 3மைல் தூரங்களுக்கும் அப்பாலுள்ள நீரினையும் நுகரக்கூடிய(மோப்பம்) இயலுமை உள்ளதாம்.
  • ஒட்டகங்களினை விடவும் எலிகளினால் நீரின்றி நீண்ட தூரம் பயணம் செல்லமுடியுமாம்.
  • வரலாற்றில் பூரணமாக சந்திரன் தென்படாத மாதங்களாக 1865ம் ஆண்டு பெப்ரவரி மாதமும் 1999ம் ஆண்டு பெப்ரவரி மாதமும் விளங்குகின்றதாம்.
  • அதிகளவான இரும்புச் சத்தானது பசுப்பாலினை விடவும் ஒட்டகப் பாலிலே உள்ளதாம்.
  • மெண்டலிவ்வின் ஆவர்த்தன அட்டவணையில் " J " என்ற எழுத்தினை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ கொண்ட எந்த மூலகமும் இல்லை.
  • இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு பேசுவதற்கு அனுமதியில்லையாம்.
  • ஐஸ்லாந்து நாட்டின் பல்கலைக்கழகங்களின் வழங்கப்படும் பட்டப்படிப்பு பட்டங்கள் 2/3 பங்கு பெண்களாலாலேயே பெறப்படுகின்றதாம்.
***


இலங்கை,இந்திய அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது(டிசம்பர் 21).இந்திய அணி திட்டமிட்டு வெற்றி இலக்கினை அடைந்து கொண்டது. இந்திய அணி 44.2 ஓவர்களில் 3 விக்கடகளை மாத்திரமிழந்து 240 ஆகிய வெற்றி இலக்கினை அடைந்து கொண்டது.

நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களைப் பெற்றார். இது சச்சினின் 93வது அரைச்சதம் (இந்தப் பதிவு என்னுடைய 93வது பதிவு.. எப்படி ஒற்றுமை..ஹா..ஹா) என்பதுடன் இலங்கைக்கெதிரான 17வது அரைச்சதமாகும்.



***

No comments:

Blog Widget by LinkWithin