Saturday, November 28, 2009

பன்றிக்கு தூக்குத் தண்டனையா????...................

ü சீன மக்கள் ஒருவரின் இறுதிச்சடங்கின் போது காகித பணத்தாள்களினை எரிப்பராம். ஏனெனில் இறந்தவர் மறுபிறப்பில் பணக்காரராவதற்காம்...

ü மேலைத்தேய நாடுகளில் "பிரெஞ்சு முத்தம்" என அறியப்படுகின்ற முத்தமானது பிரான்ஸ் நாட்டில் "ஆங்கில முத்தம்" என்றே அழைக்கப்படுகின்றது.

ü 1386 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் "பன்றி" ஒன்று பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு தண்டிக்கப்பட்டது. ஏனெனில் அந்தப் பன்றியானது ஒரு குழந்தையினை கொன்றமைக்காகவாம்.

ü ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரம்பிக்கின்ற எந்தவொரு மாதமும் 13ம் திகதியினை வெள்ளிக் கிழமையாகக் கொண்டிருக்கும்.

ü அட்டையானது 32 மூளைகளைக் கொண்டுள்ளதாம். (நல்ல காலம் மனிதனுக்கு 32 மூளைகளாயின்......................எப்படி இருக்கும்???)

ü பிறப்பிலிருந்து எமது கண்கள் மாற்றமின்றி ஒரே அளவாகவே காணப்படுமாம். ஆனால் எம்முடைய மூக்கினதும், காதுகளினதும் வளர்ச்சியானது ஒருபோதும் நிற்பதில்லையாம்.

ü மெச்சிக்கோ நகரமானது வருடாந்தம் 10 அங்குலங்கள் புதைந்து வருகின்றதாம்.

ü யானையின் தும்பிக்கையில் எந்த என்புகளும் கிடையாது. மாறாக 40000 தசைகள் உண்டாம்.

ü வரிக்குதிரைகளினால் செம்மஞ்சள்(orange)நிறத்தினைப் பார்க்க முடியாதாம்.

ü "வெள்ளைக் கழுகின் தாயகம்" என்ற சிறப்புப் பெயரைக் கொண்ட நாடு - போலந்து


***

No comments:

Blog Widget by LinkWithin