Thursday, October 15, 2009

மஹேந்திர சிங் டோனிக்கு அபராதம்


இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான மஹேந்திர சிங் டோனி தான் வெளிநாட்டிலிருந்து வாங்கிய ஆடம்பர “ஹம்மர் H2 ”(SUV) காரை பதிவு செய்வதற்கு காலதாமதமாகியதால் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மஹேந்திர சிங் டோனி தனது காரினை பதிவு செய்வதற்கு காலதாமதமாகியதால் இந்திய ரூபாய் 100 அபராதம் கடந்த 7ம் திகதி விதிக்கப்பட்டதாக மாநில போக்குவரத்து திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஒருவர் கார் வாங்கி ஒருவார காலத்திற்குள் அதனை பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். டோனி தனது காரினை பதிவு செய்வதற்கு சமர்ப்பித்த விண்ணப்பமானது பூரணமாக பூர்த்தி செய்யப்படவில்லை என அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட அபராதத்திற்குப் பின்னர் பதிவு செய்யப்படாத நான்கு சக்கர வாகனத்துடன் வாகன உரிமையாளர் பிடிபட்டால் மோட்டார் வாகன சட்ட்த்தின் கீழ் இந்திய ரூபாய் 4500 அபராதம் விதிக்கப்படும் என அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங்குடன் டோனி கடந்த ஜூலை 30ம் திகதி லக்னோவிலிருந்து ரஞ்சி நோக்கி “ஹம்மர் H2” வாகனத்தில் பயணம் செய்தார்.

கிரிக்கெட் வீரர்களில் மஹேந்திர சிங் டோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய வீரர்களே ஆடம்பரஹம்மர் H2” வாகனத்தினை தமது உடமையாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று வருடங்களுக்கு முன்னரும் டோனி தனது காரில் பயணம் செய்த போது போக்குவரத்து விதிமுறையினை மீறியமைக்காக அபராத்திற்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல வாகனபதிவு எண் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர “ஹம்மர் H2 ” வாகனத்தை சாலையில் ஓட்டியதற்காக ஹர்பஜன் சிங் அபராதத்திற்கு உள்ளாகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ஆகஸ்ட் மாதம்)


***

No comments:

Blog Widget by LinkWithin