Monday, October 12, 2009

உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் # 02

1) பிரபல நகைச்சுவை நடிகர் சார்ளி சாப்ளின் ஒரு தடவை ஒரு போட்டியில் 3ம் இடத்தையே பெற்றுக் கொண்டாராம். என்ன போட்டி தெரியுமா? சார்ளி சாப்ளினை ஒத்த ஒருவரை தெரிவு செய்யும் போட்டியிலாம். ( நம்மமுடிகின்றதா??? )





2) அலெக்ஸ்சாண்டர் கிரஹம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதில்லையாம். காரணம் என்னவெனில் அவர்கள் இருவரும் காது கேளாதவர்களாம்.

3) அமெரிக்காவின் 17வது ஜனாதிபதியாக இருந்த அன்றூ ஜோன்சன் தனது 17வயது வரையும் வாசிக்கவே தெரியாமல் இருந்தாராம்.

4) உலகப்புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவினுடைய முழுப்பெயர் என்ன தெரியுமா? “Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Martyr Patricio Clito Ruíz y Picasso” (என்ன வாசித்து ஞாபகம் வைக்கலாமா???)

5) அலெக்ஸ்சாண்டர் கிரஹம் பெல் thanதன்வசம் மேலும் ஒரு சாதனையைக் கொண்டுள்ளாராம். தனது 72வது வயதில் ஒரு மணித்தியாலத்தில் 70வது மைல்களுக்கும் அதிகமாக பயணம் செய்து உலக நீர் வேக சாதனையைப் படைத்துள்ளார்.

6) சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் Time's சஞ்சிகையின் 1938ம் ஆண்டின் மனிதராக தெரிவு செய்யப்பட்டவராம்.

7) ஆங்கிலத்தில் “Assassination” (படுகொலை) என்ற சொல்லை கண்டுபிடித்தவர் நாடகாசிரியர் சேக்ஸ்பியர் தானாம்.


***

2 comments:

பின்னோக்கி said...

பிரம்மிப்பூட்டும் தகவல்கள்

Saravanakumar Karunanithi said...

thanks for ur useful info, keep writing it

Blog Widget by LinkWithin