Monday, July 20, 2009

சந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா?

சந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங்

20 ஜுலை 2009 உடன் ,மனிதன் முதன் முதலில் சந்திரனில் கால் பதித்து 40 வருடங்கள் பூர்த்தியாகின்றது.1969 ஜுலை 16 அன்று தமது பயணத்தினை அப்பலோ11 ( Apollo 11) இல் அமெரிக்காவின் புளோரிடா கரைகளிருந்து ஆரம்பித்து 20 ஜுலையில் சந்திரனை அடைகின்றார்கள். இதில் பயணித்த நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கியதன் மூலம் சந்திரனில் கால் பதித்த முதல் மனிதன் என்ற பெருமைக்குரியவராக மனிதராக மாறுகின்றார். ஆம்ஸ்ரோங்கினைத் தொடர்ந்து அவருடன் ஒன்றாக பயணித்த வுஸ் அல்ரின் ( Buzz Aldrin) சந்திரனில் தடம் பதிக்கின்றார் . மேலும் இவர்களுடன் பயணித்த மைக்கல் கொலின்ஸ் ( Michal Collins) வான்வெளியிலேயே தரித்துநின்றமை குறிப்பிடத்தக்கது.


சில அரிய தகவல்கள் :
சந்திரனில் தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் தனது இடது பாதத்தினையே தரையில் பதித்தாராம்.

சந்திரனில் பதித்த முதல் கால் தடம்


நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் பேசிய முதல் வார்த்தையாக Okay பதிவாகின்றது.

***

No comments:

Blog Widget by LinkWithin